Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

ஆன்லைன் ரம்மி சாவுகள்… ! தமிழ்நாடு அரசு இதைத்தான் செய்யணும்…

ஆன் லைன் சூதாட்டம் (?) என்று சொல்லப்படுகிற ஆன் லைன் ரம்மி ஆட்டம், ஒரு சூதாட்டமே இல்லை என்றுதான் அனைத்துத் தரப்பிலும் நிறுவப்பட்டு இருக்கிறது. “பலர் பணத்தை இழக்கிறார்களே, பலர் சாகிறார்களே” என்றெல்லாம் ஆதங்கத்தோடு எதையாவது கிறுக்கக்கூடாது என்பதையும் எழுத்துலகில் உள்ளோர்….

வருவாய் கோட்டாட்சியர் யார்? பொன்னேரி பஞ்சாயத்து இது…

வருவாய் கோட்டாட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் புதிய கோட்டாட்சியர் பொறுப்பு ஏற்காததால் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமை பொன்னேரியில் உருவாகியுள்ளது. அதன் பின்னணித் தகவலோ இன்னும் அதிரவைக்கிறது. திருவள்ளூர் மாவட்டம்….

மூட்டுவலிபோவும், உடல் நாற்றம் நீங்கும்! ஆளை தேற்றும் நன்னாரி!

டேய்.. நன்னாரிப்பயலே, எப்படிடா இருக்கே ?நள்ளிரவில் இப்படி ஒரு அழைப்பு. போனைப் போட்டு, நலம் (?) விசாரித்து தூக்கத்தைக் கெடுத்தான், அமீர் ! பள்ளித்தோழன். திருவண்ணாமலை வாசி. 1990-கள் வரை அக்மார்க் சென்னைக்காரன். எப்போது நினைவுக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் இப்படித்தான் லைனில்….

தமிழ்நாடு போலீசில் 2020 – 2022 ஏப்ரல் வரை 850 மரணங்கள்… பின்னணி என்ன?

காவல்துறையில் பணிச்சுமை காரணமாக பலர் விட்டோடியாக பணியை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள், பலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள், பலர் மன உளைச்சலுக்கான வடிகாலாய் குடும்பத்தையும், பொதுமக்களையும் போட்டுத் தாக்குகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஒரு அலசல் கட்டுரை இது. ஒரு….

திறமையான காவல்பணி! போலீசாருக்கு கமிஷனர் விருது…

சென்னையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார். விருதுக்கான காரணமும், விசாரணை விபரமும்: 1. சென்னை, தண்டையார் பேட்டை. வினோபா நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். வேலை முடித்து….

வாழ்வை சீரழித்த கணவன்… பழி வாங்கத் துடித்த மனைவி… கள்ளக் காதலியின் பகீர் திட்டம்…
சீரியலை மிஞ்சிய சீரியஸ் கதை!

காதலித்து திருமணம் முடித்த பெண்ணை தவிக்க வைத்து விட்டு கஞ்சா விற்கும் பெண்ணோடு சுற்ற ஆரம்பித்தான் கணவன். வயிற்றுக்கு வழியின்றி தகாத பெண்களோடு நட்பு வைத்து வாழ்க்கையின் போக்கையே மாற்றிக் கொண்டாள் அந்தக் காதல் மனைவி. முன்னாள் காதல் கணவனையும் பழி….

சென்னையில் சிக்கியது! ரூ.30லட்சம் கள்ளநோட்டு…

சென்னை மணலி புதுநகரில் கடந்த 12ஆம் தேதி, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து புதிதாக சிலர் குடியேறினர். வீட்டின் உரிமையாளருக்கும் அக்கம் பக்கத்து ஆட்களுக்கும் புதுக்குடித்தன நபர்கள் மீது சந்தேகம் ஏற்படும் சூழல் சில நாளிலேயே உருவானது. இரவு வேளையில், “200….

பேரூராட்சியில் குடியேறுவோம் ! நரிக்குறவர்கள் எச்சரிக்கை…

குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள், போராட்டத்தில் குதித்தனர். எங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறுவோம் என்றும் அப்போது எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், மொத்தம் 15….

காதலுக்காக தற்கொலையா ? திருந்தப்பாருங்கள்…

சென்னை மாம்பலம் போலீசார், விசாரிக்கும் ஒரு வழக்கு இது !காதலர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு அது எல்லை மீறிப்போக, ‘லைசால்’ என்ற திரவத்தை குடித்துள்ளார், காதலி. ’நீ எதைக் குடித்தால் எனக்கென்ன, எக்கேடு கெட்டும் போ’ என்ற ரீதியில், காதலியை ஆட்டோவில் ஏற்றிக்….

முதலமைச்சர் பங்கேற்ற ‘செங்காடு’ ஊராட்சியில் நடந்தது இதுதான்…

இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ, எள்ளல் தன்மையுடன் பகிரப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ‘அரிசி’ குறித்து புகார் சொல்லும் ஒரு பெண்ணின் யதார்த்த பேச்சைத்தான் அப்படி பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருப்பெரும்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்….