Month: March 2022

ரூ. 30 லட்சம் அபராதம் ! ஊரைவிட்டு ஒதுக்குவதாக நாட்டாமை சொன்ன தீர்ப்பு… தற்கொலை செய்த விவசாயி!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. கடந்த ஆண்டு (2021) செங்கல்பட்டில் தன் உறவினர் வீட்டில் இறுதி சடங்கிற்கு சென்றபோது எல்லப்பன் என்பவர் மதுபோதையில் அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது…..

புராதன சிவன்கோயில் புனரமைப்பும், கும்பாபிஷேகமும் …

திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் கிராமத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வைத்தியநாத ஆத்ம லிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் புனரமைக்கப் பட்டது. சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில், ஆலய கும்பாபிஷேகத்திற்கான யாக….

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் தங்க கவசம் ! ஆந்திர பக்தர் காணிக்கை…

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயயேந்திர சரஸ்வதி நாளை (14.03.2022) அணிவிக்கிறார். இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளரான ந.சுந்தரேச ஐயர் அளித்த பேட்டி : ஆந்திர….

கட்டுநர்களின் மாநாடு ! முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை…

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 30 வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் உரையில், “இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த….

அகில இந்திய வானொலியில் வேலை வாய்ப்பு ! எடிட்டர், டிசைனர், நியூஸ் ரீடர் உள்பட பல வாய்ப்புகள்…

அகில இந்திய வானொலி நிலையத்தில் ஊடகம் சார்ந்த 2022 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.ஊடகத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் அகில இந்திய வானொலி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….

குப்பை இல்லா நகரம் அமைப்போம் ! நீதியரசர் ஜோதிமணி பேட்டி.

குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவது நம்மிடம்தான் நம் கையில்தான் இருக்கிறது என்று நீதியரசர் ஜோதிமணி குறிப்பிட்டார். திருவள்ளூர் பொன்னேரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு தலைவர் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்பு குழுத் தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வுகளை….

ஆற்றின் நடுவே சாலை ! மணல் கொள்ளையர் கொட்டம்! பதறும் விவசாயிகள்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள் தோட்டக்கலை சார்பில் வழங்கப்படும் மானிய விலை விதைகள் தரமற்றவையாக உள்ளதாகவும் அத்தகைய விதைகளை பயன்படுத்தினால்….

ஊழலற்ற ஊராட்சியில் லயோலா மாணவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

உலக மகளிர் தின நாளில் கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர், சோபனாதங்கம் சுந்தருக்கு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அது என்ன, செய்திக்குள் போவோம்… செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ளது….

போதை ஒழிப்பு சிறப்பு வாரம் ! சென்னை போலீஸ் நடவடிக்கை : 28 பேர் கைது. போதைப் பொருட்கள் பறிமுதல்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வடக்கு இணை போலீஸ் கமிஷனர் ரம்யாபாரதி நேரடி கண்காணிப்பில் போதை ஒழிப்பு (7நாட்கள்) சிறப்பு நடவடிக்கையை ஒருவார காலம் தொடர்ந்து மேற்கொண்டனர். போலீசாரின் நடவடிக்கையில் முதற்கட்டமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற….

பத்திரிகையாளர் உயிர் காக்க உதவிடுங்கள் தோழர்களே !

வடசென்னையின் இளம் பத்திரிகையாளர் சதீஷ்குமார் (வயது 29). இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் தற்போது டயாலிசிஸ் செய்து வருகிறார் இவருக்கு சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது . அவரது சகோதரி….