Day: March 15, 2022

எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் ரெய்டு ! ரூ.58 கோடி சொத்து குவிப்பு என தகவல்.

முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி….

நிறுவனம் 400, பணியிடம் 50ஆயிரம்! கிரசென்ட் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்! மார்ச் 20-ஐ மிஸ் பண்ணாதீங்க யூத்…

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக சென்னைவண்டலூர் கிரசென்ட் கல்லூரியில் தனியார் துறையில் பணியமர்த்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் எதிர்வருகிற ஞாயிறு (20/03/2022) காலை 8.30.மணி முதல் மாலை 3 மணி வரை….

சினிமாவில் நடிக்கிறார் ஜாங்கிட் ஐபிஎஸ். !

முன்னாள் போலீஸ் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் சினிமாவில் நடிக்கிறார். ஷரவணசக்தி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதை வசனத்தில் விரைவில் ரிலீசாகிறது ‘குலசாமி’ திரைப்படம். குலசாமி படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது. பர்ஸ்ட்லுக்கில் பிரபல ஐபிஎஸ் (பணி ஓய்வு) அதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் யூனிபார்மில்….

new

நடிகர் சூர்யா சினிமா பட பாணியில் கும்பாபிஷேகத்தில் நடந்த திடீர் திருமணம்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. ஆலய கும்பாபிஷே நாளான இன்று, (14.03.2022) நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தைக் கொண்டு சிவாச்சாரியார்கள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். அப்போது யாரும்….

ஓ (MY GOD) மைக்ரான் ! மறைந்திருந்தே மிரட்டும் மர்மம் என்ன?

சீனாவின் வுகானிலிருந்து 2019 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது இந்த வைரசின் அட்டகாசம். இதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாமல் இருந்த 2019 வருடத்தில்கூட, கொரானாவின் வேட்டைக்கு விருந்தானவர்களின் எண்ணிக்கை விண்ணைத் தொடவில்லை. ஆனால் 2020 ஆம் ஆண்டின் இடைவெளியில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும்….

காஞ்சி: அரசு ஜி.ஹெச். பிரசவ வார்டில் புதிய கட்டுப்பாடுகள் ! குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடுதலில் இறங்கினர். குழந்தை மீட்கப்பட்டது. இந்நிலையில் பேறுகால (பிரசவ வார்டு) பிரிவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்….