
நாட்டின் பிரதம மந்திரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும், இந்திய அணுசக்திக்(மும்பை)கழகம் (NPCIL) காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு, யார் -யார் விண்ணப்பம் செய்யலாம் என்ற விவரங்கள்:
பணி நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL). பணி இடங்கள்: 122
பதவி: துணை மேனேஜர் (எச்.ஆர்., எஃப் அன்ட்-ஏ, சி-அன்ட் எம்.எம்., லீகல்), இந்தி மொழி பெயர்ப்பாளர்
கல்வித்தகுதி: பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., எம்.பி.ஏ., முதுகலை பட்டப்படிப்பு
வயது: 27-11-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்தி மொழி பெயர்ப்பாளர் பணிக்கு மட்டும் 21 முதல் 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் இணையதள முகவரி: https://www.npcilcareers.co.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-11-2025-
பியெஸ்கேபி